இந்து சமயம் என்பது யாது?
இந்துசமயம் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது சைவ சமயமே ஆகும். இந்து சமயம் இந்தியா முழுவதும் மட்டும் அன்றி உலகிம் முழுமையும் பரவி இருந்தது. இந்தியாவின் வட எல்லை ஆகிய காச்மீரம் முதல் தென் எல்லையாகிய கன்னியாகுமாரி வரை சைவசமயம் உள்ளது.
உலகெங்கும் சிவவழிபாடு உள்ளது; என்றாலும், தென்னாடாகிய தமிழ்நாட்டில் அவ்வழிபாடு பன்னிரு திருமுறைகளோடு துளங்குகின்றது. தென்னாட்டில் சிவனாக வழிபடப்படும் கடவுளே பிற நாடுகளில் இறைவனாக இலங்கின்றான் இதனாலேயே,
“தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
என்று மணிவாசகப் பெருந்தகை அருளியுள்ளார்.
தென்னாட்டுச் சிவன்கோயில்களில் சிவபெருமான் சிவலிங்க வடிவில் மூலவராக இருக்கிறார். இந்தச் சிவலிங்கவடிவிலிருந்து தோன்றியனவே பிற வடிவங்களாகிய கணபதி, முருகன், அம்மை, திருமால் முதலிய மூர்த்தங்கள் ஆகும். இந்துசமயம் வழிபடும் எல்லா இறை வடிவங்களையும் சைவசமயம கொண்டிருக்கிறது. எனவே, இந்து சமயம் வேறு - சைவசமயம் வேறு அல்ல; இந்துசமயம் என்றால் அது சைவ சமயத்தையே குறிக்கும்.
இந்து சமயத்தில் சிறு தெய்வ வழிபாடுகளும் உள்ளனவே இவை எப்படி ஏற்பட்டன?
சிறு தெய்வ வழிபாடு பயனற்றது. அதனால் ஆன்மாக்களுக்குள்ள துன்பங்களைப் போக்கிக்கொள்ள முடியாது. இதனாலேயே நம்முடைய பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் அனைவரும் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்திருக்கிறார்கள். இவ்வுண்மை, அறியாத பாமரர்கள் மட்டுமல்லாமல் படிப்பறிவு உள்ளவர்களும் சிறுதெய்வ வழிபாடு செய்வதற்கக் காரணம் அவர்கள் சைவசித்தாந்தம் பயிலாததானலேயே ஆகும்.
சிறு தெய்வ வழிபாடு எப்போது ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. அது மக்களின் அறியாமையாலும் திரிபாலும் ஏற்பட்டது என்றே கொள்ளவேண்டும்.
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.
தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை. எடுத்துக்காட்டுக்காகச் சிலவற்றை இங்குக் காணலாம்.
சிவமகா புராணத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு சிறு சிவ புண்ணியம் செய்த கேடான நிலையில் இருந்தவனும் உய்வு பெற்றனன் எனக்கூறும். அதற்கு அடுத்த தலைப்பே எவ்வாறு ஒரு நல்ல சிவபக்தர் செய்த சிறு சிவ அபராததிற்காகப் பெற்ற கேடு குறித்துக் கூறும். இவை சிறிதளவேனும் சிவ புண்ணியம் செய்ய வேண்டும், செய்யும் பணியைக் கவனத்துடன் குற்றமின்றிச் செய்ய வேண்டும் என்னும் தத்துவங்களை உணர்த்த என்று கொள்ளாமல் உள்ளவாறே கொண்டால் குழப்பமே கிட்டும்.
இவ்வாறு புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்வதே நல்லது
திருமுறைகளை எவ்வாறு படனம் (பாராயணம்) செய்ய வேண்டும்?
பண்ணோடு பாடத் தெரிந்தவர்கள் அவற்றிக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணில் பாடுவதே நல்லது - பண்ணோடு பாடத்தெரியாதவர்கள் தங்களுக்குத் தெரிந்த இராகத்தில் சற்று இசைத்துப்பாடலாம். எப்படிப் பாடினாலும் திருமுறைகளை வாய்விட்டுப் பாடவேண்டும் மனத்திற்குள்ளேயே படனம் செய்வதோ முணுமுணுத்துக் கொண்டு படனம் செய்வதோ கூடாது. அதற்குக் காரணம் திருமுறைகளில் உள்ள சொற்களுக்கு மந்திர ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் சொற்களை வாய்விட்டுப் பாடும்போது ஒலி அலைகளாகச் சென்று நம்மைச் சுற்றி ஒரு பேரறற்றலை ஏற்படுத்துகின்றது. திருமுறை பாடுபவர்களைக் கெட்ட ஆவிகள் அணுகுவதற்கு அஞ்சுகின்றன; சிறிய நச்சுப் பிராணிகள் கூட அவர்கள் நெருங்குவதில்லை. திருமுறைச் சொற்களிலுள்ள மந்திர ஆற்றல் திருமுறைப் படனம் செய்பவர்களை அணுகவிடாமல் அவைகளைத் தடுக்கின்றன.
--
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
கும்மிடிப்பூண்டி
+919444175185
நினைவேறுகிறது…